சிருஷ்டி-6 in www.padmalogy.blogspot.in
ஆசிர்வாதம் செய்வது என்பதை நல்லெண்ணத்துடன் வாழ்த்துவது என்று பொருள் கொள்ளலாம். ஆசிர்வாதத்துக்கும், பார்வைக்கும் சம்பந்தம் உண்டு என்கிறது சாஸ்திரங்கள். ஒருவரை கண்களால் பார்க்கும் போதோ அல்லது அவரது நற்செயலை நாம் காதுகளால் கேட்கும் போதோ, மனமும் அதை நல்லெண்ணத்தோடு கிரஹித்துக் கொண்டு, அதே அதிர்வலையில் ஆசிர்வதிக்கும் போது தான் அதன் முழுமையான பலனும் சென்றடையும். பார்வைகள் மற்றும் அதன் தொடர்பான ஆசிர்வாதங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம். பார்வையில் 3 விதம் உண்டு. ஒவ்வொரு பார்வைக்கும் ஒரு பலன் உண்டு.
1. ஹஸ்த தீட்சை
2. நேத்ர தீட்சை
3. மானச தீட்சை
ஹஸ்த தீட்சை:
கையசைத்து ஆசிர்வதிப்பது ஹஸ்த தீட்சை. உதாரணத்துக்கு, மகான்கள் தங்கள் பக்தர்களுக்கு கையசைத்து ஆசிர்வாதம் செய்வது ஹஸ்த தீட்சை.
நேத்ர தீட்சை:
கண்களாலேயே தன் அருளைக் காட்டி ஆசிர்வதிப்பது நேத்ர தீட்சை. உதாரணத்துக்கு மீன்கள் தண்ணீரில் முட்டைகளை இட்டு, முட்டைகளை திரும்பித் திரும்பிப் பார்த்து கண்காணித்து வரும். அந்த பார்வையினாலேயே அந்த முட்டைகள் குஞ்சு பொரிக்குமாம். இது நேத்ர தீட்சை.
மானச தீட்சை:
மனதால் நினைத்து மானசீகமாக ‘நலமாக இரு’ என்று வாழ்த்துவது மானச தீட்சை. உதாரணத்துக்கு ஆமை மணலில் முட்டை இட்டு விட்டுப் போய்விடும். ஆனால் தன் முட்டைகளை மனதிலேயே நினைத்திருக்குமாம். தன் நினைவினாலேயே ஆமை குஞ்சு பொரித்து விடும்.
பத்மா(www.padmalogy.blogspot.in)
1 comment:
இன்றைய பதிவு நன்றாக உள்ளது.
Post a Comment