சிருஷ்டி-4 in www.padmalogy.blogspot.in
உணவுக்கும், குணத்துக்கும் சம்மந்தம் உண்டு என்பதை மகாபாரதத்தில் ஓர் நிகழ்வு அருமையாக விளக்குகிறது. அது என்ன என்று பார்ப்போம்.
பீஷ்மர் அம்புப் படுக்கையில் வீற்றிருக்கிறார். அப்போது அவரிடம் தர்மநீதியைப் பற்றிப் பற்றிச் சொல்லுங்கள் என்று எல்லோரும் கேட்கின்றனர்.
‘மனிதர்கள் நடுநிலையாக இருக்க வேண்டும். தவறை யார் செய்தாலும் நடுநிலையோடு கண்டிக்க வேண்டும்’ என்றார் பீஷ்மர்.
அப்போது திரெளபதி கேட்கிறார்.
‘இந்த நியாய எண்ணம் என்னை துகில் உரித்த போது ஏன் வரவில்லை?’
பீஷ்மர் பொறுமையாக பதிலுரைத்தார்.
‘அப்போது நான் துரியோதனனின் சாப்பாட்டை சாப்பிட்டு வளர்ந்தேன். அதனால் நடுநிலை தவறி நடந்து கொண்டேன். அநியாயங்களுக்கு துணை நின்றேன். இப்போது நான் அம்புப் படுக்கையில் படுத்திருப்பதால் அவன் உணவால் உருவான இரத்தம் அனைத்தும் வெளியேறி விட்டது. இப்போது நான் என் சுய குணத்தோடு இருக்கிறேன். அதனால் என் பேச்சில் தர்மமும், நடுநிலையும் வெளிப்படுகிறது’
உணவு அளிப்பவனின் குணநலன்களினால், அந்த உணவை உண்டு வாழ்பவர்களின் குணநலன்கள் மாறுபடும் என்பது இந்நிகழ்வின் மூலம் தெளிவாகிறதல்லவா?
-பத்மா(www.padmalogy.blogspot.in)-