Thursday, May 23, 2013

உங்களுடன் சில வரிகள்!

சிருஷ்டி-1 in www.padmalogy.blogspot.in
 
திருக்கோயிலூர் என்னும் சிறிய ஊரில் பிறந்து கிராமிய சூழலில் வளர்ந்ததாலோ என்னவோ, உடலைக் கெடுக்காத இயற்கை உணவைப் பற்றியும்,  இயற்கை மருத்துவத்தின் அருமையைப் பற்றியும், இயல்பான வாழ்க்கை முறையைப் பற்றியும்  என்னால் முழுமையாக உணர முடிகிறது என்று நினைக்கிறேன்.

பாட்டி வைத்தியத்தின் கைபக்குவத்தை பேத்தியாகிய எனக்கு அன்றே என் பாட்டி என்னோடு பகிர்ந்து கொண்டதால் தான், அவை என் மூளையின் ஒரு மூலையில் பதிவாகி இன்றும் அழியாத கோலங்களாய் என்னை ஊக்குவிக்கின்றன என்றால் அது மிகையாகாது.

சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் என்பது முதுமொழிக்கேற்ப கேட்டவற்றையும், அனுபவித்தவற்றையும் வாழ்க்கையில் செயல்படுத்தி செயல்படுத்தி அவற்றை செம்மைப்படுத்தி என் உணர்வுகளை ஊக்கப்படுத்திக் கொண்டதன் விளைவு தான் அவற்றை இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் நிலையில் இருக்கிறேன்.

நான் பகிர்ந்து கொள்ள இருக்கும் தகவல்கள் உங்கள் அனைவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் பயன் அளிக்கும் என்ற நம்பிக்கையில் இந்த ப்ளாக் பயணத்தை தொடர்கிறேன்.

வாழ்த்துக்களுடன்...

-பத்மா(www.padmalogy.blogspot.in)-