சிருஷ்டி-5 in www.padmalogy.blogspot.in
ஒரு தேனியும், பறவையும் நேரில் சந்தித்துக் கொண்டன.
தேனிக்கள் மிகவும் கஷ்டப்பட்டு பூக்களில் இருந்து தேனை எடுத்து தேன் கூடு கட்டி சேமிக்கின்றன. ஆனால், மனிதர்கள் தேன்கூட்டின் கீழே நெருப்பை மூட்டி தேனிக்களை விரட்டி தேனை திருடி எடுத்து பயன்படுத்துகின்றனர். கஷ்டப்பட்டு உழைப்பவர்கள் நீங்கள். ஆனால் அதை சுலபமாக திருடிச் சென்று விடுகின்ற மனிதர்கள் மீது உங்களுக்கு வருத்தமே வராதா? என்று கேட்ட பறவைக்கு தேனி சிரித்துக் கொண்டே பதில் சொன்னது.
மனிதர்களால் நாங்கள் சேமித்த தேனியைத் தான் திருட முடியும். ஆனால் தேனை சேகரிக்கும் எங்கள் திறனை அவர்களால் திருட முடியாதல்லவா?
எவ்வளவு பெரிய உண்மை இக்கதையில் இருக்கிறது? ஒருவரது படைப்பை யார் வேண்டுமானாலும் திருடி தன் பெயரில் அதை பயன்படுத்த முடியும். ஆனால் அந்த படைப்பைப் படைத்த படைப்பாளியின் திறமையை யாராலும் ரீ-கிரியேஷன் செய்யவே முடியாது என்பது தான் இக்கதை மூலம் உணர்த்தப்படுகின்ற செய்தி.
படைப்பை திருட முடிகின்றவர்களால், படைப்பாளிகளின் திறமையை தொடக் கூட முடியாது.
இக்கதையை இன்று FM ஒன்றில் காலையில் ஒரு அறிவிப்பாளர் சொல்லிக் கொண்டிருந்தார். விடியற்காலையில் இக்கதையை கேட்ட போது மனதுக்கு இதமாக இருந்தது.
-பத்மா(www.padmalogy.blogspot.in)-
1 comment:
அர்த்தமுள்ள கதை...
Post a Comment