Monday, June 24, 2013

தினம் 10 செயல்கள்!

சிருஷ்டி-9 in www.padmalogy.blogspot.in
 
1.   விடியற்காலையில் எழுந்ததும் பத்து நிமிடங்கள் வாக் சென்று வந்தால் சுறுசுறுப்பாக இருக்கும்.

2.   அதுபோல ஐந்து நிமிடங்கள் பிராணாயானம் செய்தாலும் சுறுசுறுப்பாக உணரலாம். தரையில் அமர்ந்து கண் மூடி மூச்சை நன்றாக இழுத்து விடலாம். இதை பத்து முறை, பதினைந்து முறை என கணக்கு வைத்துக் கொண்டு செய்தால், அதுவே மிகச் சிறந்த மூச்சுப் பயிற்சியாகும்.

3.   காலையில் காபி சாப்பிடுவதற்கு முன் ஒரு டம்ப்ளர் வெதுவெதுப்பான வெந்நீர் குடிப்பது நல்லது.

4.   சாப்பாடு சாப்பிடுவதற்கு அரை மணி முன்னதாகவும், சாப்பிட்டு அரை மணி நேரத்துக்கு பிறகும் வெதுவெதுப்பான வெந்நீர் சாப்பிட்டால் நல்ல ஜீரண சக்தி கிடைக்கும்.

5.   இரவு உறங்குவதற்கு முக்கால் மணி நேரத்துக்கு முன்னால் வெந்நீர் சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.

6.   பொதுவாகவே தயிராக சாப்பிடுவதற்கு பதில் மோராக கடைந்து சாப்பிடுவது சிறந்தது.

7.   இரண்டு மூன்று முறை காபி சாப்பிடும் வழக்கம் உள்ளவர்கள், ஒரு காபியை கட் செய்து விட்டு, தயிரில் சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம். நல்ல எனர்ஜி கிடைக்கும்.

8.   வெந்நீரில் டீப்பொடியையும், சர்க்கரையையும் போட்டு கொதிக்க விட்டு, இறக்கியதும் எலுமிச்சைப்பழச் சாற்றைப் பிழிந்து குடித்து வரலாம்.

9.   தலைவலி வந்தால் சூடாக ஒரு டம்ளர் வெந்நீர் சாப்பிட்டு விட்டு உங்கள் வேலையை கவனியுங்கள். சாதாரண தலைவலி என்றால் தானாகவே உங்களை விட்டு போய்விடும்.

10. தினமும் வழக்கமாக செய்கின்ற வேலைகளுக்கு நடுவே, ஏதேனும் ஒரு புத்தகத்தில் கதை, கவிதை அல்லது கட்டுரை படிப்பது, பிடித்த பாட்டு கேட்பது என்று மாற்றிச் செய்யும் போது புத்துணர்வாக இருக்கும்.
 
பத்மா in சிருஷ்டி-9 in www.padmalogy.blogspot.in

1 comment:

panasai said...

கடைபிடிக்க வேண்டிய பயனுள்ள தகவல்....-panasai Natarajan